Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதைகள்

மதித்து வாழ்....

                 திருமணம் முடிந்து ஏழு வருடங்களில் கணவன் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து விடவே, தன் 6 வயது மகளுடன் சீர்காழியில் வசித்து வந்தாள் வசந்தி.தானும் தன் மகள் ராணியும் யாருக்கும் தொல்லையாக இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள், வசந்தி. வருமானத்திற்காக பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்தாள்.                 ‌‌                             கணவனை இழந்து, ஒரு வருடம் கழித்து தன் மகளின் விருப்பத்திற்காக தன் அண்ணனைக் காணச் சென்றாள். தன் அண்ணனும் அண்ணியும் நடந்து கொண்ட விதம் வசந்தியைக் கவலைக்கு உள்ளாக்கியது. இனி,அண்ணன் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்பதைப் புரிந்து கொண்டாள் வசந்தி!                                                                  ...

மாற்றங்களுடன் அம்மா.....

                       அம்மா நான் கிளம்புறேன் லேட்டாயிடுச்சு, என்றுச் சொல்லிவிட்டு தன் அலுவலகத்துக்குக் கிளம்பினான் அருண். 25 வயது இளைஞன் அருண். அப்பா சுந்தரம்,அம்மா பெயர் ராதிகா. வீட்டிற்கு ஒரே பையன் அருண். அதிக செல்லமாக வளர்க்கப்பட்டான்.அருணுக்கு பெண்பார்க்கும் வேலையை ஆரம்பித்தனர், அருணின் பெற்றோர். அருணுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் சொந்த ஊரான மதுரையை விட்டு சென்னையில் வாடகைக்குக் குடியேறினர்.                                                                          அருணின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ராதா. அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.பெரிய பையனுக்கு ஆறு வயது ,இரண்டாவது மகளுக்கு வயது நான்கு.ராதாவின் கணவர் வீட்டிற்கு அருகில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். ராதாவும் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறாள்....

முடிவு!!!!!

                             முருகன், வசந்தி தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். மூத்த மகன் சிவாவுக்கு தன் தங்கை மகளான  யாழினியைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் முருகன். சிவா ,யாழினி நிச்சயதார்த்தம் உற்றார்,உறவினர்கள் சூழ வெகுசிறப்பாக பெண் வீட்டில் நடைபெற்றது. அடுத்த மாதமே திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.                                  சிவாவும் யாழினியும் கல்யாணக் கனவில் இருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடும்பத்தில் முதல் திருமணம் என்பதால் முருகன், வசந்தி இருவரும் உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழைத் தந்தனர்.                                     முருகன் ,தான் சோர்வாக இருப்பதை உணர்ந்தார். அதனால்அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பிதழைக் கொடுத்து விட்டு விடுப்புச் சொல்லிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றார்...

இன்னுமொரு கருத்தம்மா...

சேகர் வீட்டிற்கு ஒரே பையன். தையல் கடை வைத்து நடத்தி வந்தார். சேகருக்கு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு யமுனா என்ற பெண் பிறந்தாள். மீனா இரண்டாவதாக கருவுற்றிருந்தாள். அனைத்து பெற்றோருக்கும் ஏற்படும் எண்ணம் போலவே அவர்களுக்கும் ஒரு பெண் இருப்பதால் இரண்டாவதாக பையன் தான் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். அதற்கேற்றார்போல் மீனாவும் முதல் குழந்தைக்கும் இப்போது உள்ள குழந்தைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் கண்டிப்பாக பையன் தான் பிறப்பான் என நம்பிக்கையுடன் கூறினாள்.                           ‌‌.           இருவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். சேகருடைய அதிகபட்ச ஆசை அவருக்கு பையன் பிறக்க வேண்டும் என்பதே.                                                                      பேறுகாலம் வந்தது. மீன...